துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் வினீத் சீனிவாசன் நடிப்பில் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் என்கிற படம் வெளியானது. மருத்துவமனைகளில் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் நடக்கும் மோசடிகளை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு சில காட்சிகள் காரணமாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இந்த படம் குறித்து ஒரு விழாவில் மலையாள நடிகர் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் நகைச்சுவை நடிகருமான இடவேள பாபு என்பவர் விமர்சித்து பேசியதாக ஒரு பரபரப்பு எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள இடவேள பாலு வினீத் சீனிவாசன் குறித்தும் அவர் நடித்திருந்த உன்னி முகுந்தன் அசோசியேட்ஸ் படம் குறித்தும் நான் தவறாக எதுவும் பேசவில்லை. அந்த படம் மோசமான படம் என்றும் நான் கூறவில்லை. அந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. பெரியவர்கள் மட்டுமே அந்த படம் பார்க்கலாம் என்கிற விதமாக அந்த சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் வினீத் சீனிவாசன் நடித்திருந்த படம் என்பதால் எல்லோரும் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையில் தனது மகனையும் அழைத்துக்கொண்டு வந்ததாக ஒரு வங்கி மேலாளர் என்னிடம் கூறினார். சென்சார் இந்த விஷயத்தில் கண்காணிக்க வேண்டும் என்று தான் நான் அந்த மேடையில் பேசினேன். ஆனால் நான் ஏதோ படம் குறித்து தவறாக பேசிவிட்டேன் என்பது போல அந்த செய்தி திரித்து வெளியாகிவிட்டது. ஆனாலும் அதன்பிறகு அந்த படத்திற்கு இன்னும் அதிக பப்ளிசிட்டி கிடைத்தது என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார்.