பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
தெலுங்கு திரையுலகில் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து வருபவர் ராணா டகுபதி. பாகுபலி படத்தில் பல்வால் தேவன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் ராணா. இவரது தந்தை சுரேஷ் பாபு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். இந்த நிலையில் ராணா மற்றும் அவரது தந்தை சுரேஷ் பாபு உள்ளிட்ட இன்னும் சிலர் மீது தனது நிலத்தை அபகரிக்கும் விதத்தில் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக பிரமோத் குமார் என்கிற தொழிலதிபர் நம்பள்ளி கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
திரைப்பட நகர கூட்டுறவு சொசைட்டியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் இருந்து தன்னை வெளியேறும்படி ரவுடிகளை வைத்து ராணாவும் அவரது தந்தை சுரேஷ்பாபுவும் மிரட்டுவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் பிரமோத் குமார். மேலும் இதுகுறித்து ஏற்கனவே பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அவர்கள் அதை ஏற்கவில்லை என்பதால் தற்போது நேரடியாகவே நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இதை தொடர்ந்து ராணா, அவரது தந்தை சுரேஷ்பாபு மற்றும் சிலருக்கு வரும் மே 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிலத்தின் மீது ஐந்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றும் இதுகுறித்து இரண்டு தரப்பிலிருந்தும் விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே வழக்கு குறித்த முழு விபரங்கள் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.