Advertisement

சிறப்புச்செய்திகள்

செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

முதல் மலையாள நடிகை பி.கே.ரோஸியை கவுரவித்த கூகுள்

11 பிப், 2023 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Google-honored-Malayalam-cinema's-first-heroine-PK-Rosy

கூகுள் நிறுவனத்தின் முகப்பு பக்கம் உலக புகழ்பெற்றது. அந்த பக்கத்தில் இடம்பெறும் டூடுல் மிகவும் கவனிக்கப்படும். உலகில் பல்வேறு துறையில் சிறந்தவர்களை இந்த டூடுல் மூலம் கூகுள் கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று மலையாள சினிமாவின் முதல் நாயகியான பி.கே.ரோஸியின் படத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது. ரோஸியின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த டூடுலை வெளியிட்டுள்ளது.

யார் இந்த ரோஸி?
இந்தியாவுக்குள் சினிமா வருவதற்கு முன்பு நாடகங்கள்தான் மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. பெண்கள் நடிக்க மாட்டார்கள். நடிக்க அனுமதியும் இல்லை. ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்தார்கள். சினிமா அறிமுகமானபோதும் இதே நிலைதான் இருந்தது. மலையாள சினிமாவின் முதல் இயக்குனரான ஜே.சி.டேனியல் மலையாளத்தின் முதல் படமான 'விகதகுமாரன்' என்ற படத்தை இயக்கினார். இது மவுனப்படம். 1930ம் ஆண்டு வெளிவந்தது.

இந்த படம் ஒரு நாயர் குடும்பத்து பெண்ணை மையாக கொண்டது. அந்த பெண்ணாக நடித்தவர் பி.கே.ரோஸி. 'காக்கராஷி' என்ற தமிழ் நாடகத்தில் நடித்து வந்த ரோஸியை ஜே.சி.டேனியல் கண்டுபிடித்து இதில் நடிக்க வைத்தார்.

ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ரோஸி நாயர் பெண்ணாக நடிப்பதா என்று பெரும் சர்ச்சை எழுந்தது. படத்தை வெளியிடவிடாமல் தடுத்தார்கள். படம் பார்க்க வந்தவர்களை அடித்து விரட்டினார்கள். எதிர்ப்புகளை மீறி முதல் நடிகையாக மலையாள சினிமாவில் கால்பதித்தவர் ரோஸி.

அதன்பிறகு சில படங்களில் நடித்தவர் புதிய நாயகிகள் புறப்பட்டு வரவும் சினிமாவை விட்டு விலகினார். கேசவ பிள்ளை என்ற லாரி டிரைவரை மணந்து கன்னியாகுமரி அருகில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் வறுமையுடன் வாழ்ந்து 1988ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது நினைவாக கேரள பெண் திரைப்பட கலைஞர்கள் பி.கே.ரோஸி கேசவப்பிள்ளை பிலிம் சொசைட்டி என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிந்தாமணி கொல கேஸ் பார்ட் 2 : ஷாஜி கைலாஷ் அறிவிப்புசிந்தாமணி கொல கேஸ் பார்ட் 2 : ஷாஜி ... பாலியல் புகாரை விசாரிக்க விதித்த தடை நீக்கம் : உன்னி முகுந்தனுக்கு மீண்டும் சிக்கல் பாலியல் புகாரை விசாரிக்க விதித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in