தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் |
எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு மாபெரும் நடிகர்களுக்கு இடையில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் ஜெய்சங்கர். 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' என்று போற்றப்பட்டவர். 200 படங்களுக்கு மேல் நடித்த ஜெய்சங்கர் 'முரட்டுக்காளை' படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி அதன்பிறகு குணசித்ர வேடங்களிலும் நடித்தார்.
எம்ஜிஆர் அழகுடன் ஒப்பிடப்பட்ட ஜெய்சங்கர் அவரைப்போலவே கொடை உள்ளம் கொண்டவராக வாழ்ந்தார். அவரது மகன்களில் மூத்தவரான விஜய் சங்கர் புகழ்பெற்ற கண் மருத்துவராக இருக்கிறார். மகள் சங்கீதாவும் டாக்டராக இருக்கிறார். இளைய மகன் சஞ்சய் சங்கர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாறு பல புத்தகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது அவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியை அவரது இளையமகன் சஞ்சய் சங்கர் தொடங்கி உள்ளார். ஜெய்சங்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அடிப்படையில் திரைக்கதை எழுதும் பணிகள் தொடங்கி உள்ளது. வருகிற ஜூலை மாதம் ஜெய்சங்கரின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறார்கள். அப்போது இந்த திட்டம் பற்றி முறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.