வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
தெலுங்குத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான தில் ராஜு மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தயாரித்த 'வாரிசு' படத்தைத் தெலுங்கில் டப்பிங் செய்து அதிக தியேட்டர்களில் வெளியிட முயற்சித்தது குறித்து தெலுங்குத் திரையுலகினல் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். பின்னர் 'வாரிசு' தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' படத்தை சில நாட்கள் தள்ளி வைத்து அவர்களை சமாதானாப்படுத்தினார் தில் ராஜு.
அடுத்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 'கீதா கோவிந்தம்' படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா, இயக்குனர் பரசுராம் இணையும் புதிய படத்தைத் தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதுதான் இந்த புதிய சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது.
'கீதா கோவிந்தம்' படத்தை அல்லு அர்ஜுனின் அப்பாவான அல்லு அரவிந்த் தெலுங்கில் வெளியிட்டிருந்தார். அப்படத்தின் இயக்குனரான பரசுராமிடம் படம் இயக்க பெரும் தொகை ஒன்றை அட்வான்ஸ் ஆகக் கொடுத்துள்ளார். ஆனால், அவருக்குப் படம் பண்ணாமல் திடீரென தில் ராஜுக்கு படம் செய்வதுதான் சர்ச்சைக்குக் காரணம். இது குறித்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தார் அல்லு அரவிந்த். ஆனால், கடைசி நேரத்தில் அதை ரத்து செய்துவிட்டார். பேசித் தீர்த்துக் கொள்ள தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் சொன்னதால் தற்போதைக்கு சர்ச்சை அடங்கியுள்ளது.