500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
வித்தியாசமான படங்களுக்கு பெயர் போன பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் கடந்த ஜனவரி 19ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. அப்போதே தமிழிலும் வெளியாக வேண்டிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி சில காரணங்களால் தாமதமானது. மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் என்று சொல்லப்படாவிட்டாலும் மம்முட்டியின் நடிப்பிற்கும் வித்தியாசமான கோணத்தில் கதையை யோசித்த இயக்குனருக்கும் என ரசிகர்களிடம் இந்த படம் பாராட்டு பெற்று வருகிறது.
ஒரு எளிய கிராமத்து மனிதராக மிகச்சிறந்த நடிப்பை மம்முட்டி வழங்கியிருந்தார். இந்த படம் வெளியாகி சரியாக 20 நாட்கள் இடைவெளிக்குள் அதாவது வரும் பிப்ரவரி 9ஆம் தேதி மம்முட்டி நடித்துள்ள ஆக்சன் படமான கிறிஸ்டோபர் ரிலீஸ் ஆக இருக்கிறது என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனரும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் என அறியப்படுபவருமான பி.உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
2010ல் முதன்முறையாக மம்முட்டியை வைத்து பிரமாணி என்கிற படத்தை இயக்கிய பி உன்னிகிருஷ்ணன் 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மம்முட்டியுடன் கைகோர்த்திருக்கும் படம் என்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்த படத்தில் சினேகா, அமலாபால், ஐஸ்வர்ய லட்சுமி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.