சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ 2, கனெக்ட், கோல்டு, காட்பாதர் போன்ற படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து அவர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் மற்றும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படங்களை தொடர்ந்து நடிப்பதற்கும் கதைகள் கேட்டு வரும் அவர், தற்போது திருச்சிற்றம்பலம் படத்தை அடுத்து மித்ரன் ஜவகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இது தவிர மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கும் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.