கதை நாயகன் ஆன தயாரிப்பாளர் | வானத்தைப்போல ஸ்வேதா திருமணம்: காதலரை மணந்தார் | அமெரிக்க திரைப்பட விழாவில் விஜய்சேதுபதி படம் | மும்பை லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி பெயர் | எனக்கு உயிர் கொடுத்தவர் விஜயகாந்த் : நினைவிடத்தில் நமீதா உருக்கம் | இந்த ஆண்டும் சாதனை மாணவர்களை சந்திக்கிறார் விஜய் | யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா |
விஷ்ணு சசிசங்கர் இயக்கத்தில், உன்னி முகுந்தன், பேபி தேவநந்தா மற்றும் பலர் நடித்து டிசம்பர் 30ம் தேதி வெளிவந்த மலையாளப் படம் 'மாளிகப்புரம்'. சபரிமலைக்குச் செல்ல ஆசைப்படும் ஒரு சிறுமி, தனது தோழன் ஒருவனுடன் சபரிமலை செல்வதுதான் இப்படத்தின் கதை.
கேரளாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடக்கும் மூன்றாவது படம் இது. இதற்கு முன்பு மோகன்லால் நடித்த 'புலிமுருகன், லூசிபர்' ஆகிய படங்கள்தான் 100 கோடி வசூலைக் கடந்திருந்தது.
'மாளிகப்புரம்' 100 கோடி வசூலைக் கடந்தது குறித்து அப்படத்தின் கதாநாயகன் உன்னி முகுந்தன், “அனைவருக்கும் நன்றி, மகிழ்ச்சி, பெருமை…எங்களது படத்திற்கு ஆதரவும் அன்பும் தந்த அனைத்து குடும்ப ரசிகர்கள், குழந்தைகள் அனைவருக்கும் மிக்க நன்றி. 'மாளிகப்புரம்' குழுவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்தகள்,” எனத் தெரிவித்துள்ளார்.