முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சன ரீதியாக அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் கிறிஸ்டோபர், தெலுங்கில் ஏஜென்ட் என அவரது அடுத்தடுத்த படங்கள் என்கிற ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இன்னொரு பக்கம் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வரும் காதல் ; தி கோர் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் சற்று ரிலாக்ஸ் ஆன மம்முட்டி, எர்ணாகுளத்தில் உள்ள தான் படித்த சட்டக்கல்லூரிக்கு விடுமுறை தினத்தன்று ஒரு விசிட் அடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் படித்த அந்த கல்லூரியில் தன்னுடைய வகுப்பறைக்கு சென்று அமர்ந்து தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் மம்முட்டி. “நாங்கள் படிக்கும் காலத்தில் இங்கே தான் எங்கள் ஆட்டமும் பாட்டமும் நடக்கும்.. அதே சமயம் இது ஒரு பழைய சட்டசபை போலவும் நீதிமன்றம் போலவும் கூட இருந்தது” என்று தனது மலரும் நினைவுகளை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் மம்முட்டி. அவரது ரசிகர்களிடையே இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..