வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம் விமர்சன ரீதியாக அவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது. இதைத்தொடர்ந்து மலையாளத்தில் கிறிஸ்டோபர், தெலுங்கில் ஏஜென்ட் என அவரது அடுத்தடுத்த படங்கள் என்கிற ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இன்னொரு பக்கம் ஜோதிகாவுடன் இணைந்து நடித்து வரும் காதல் ; தி கோர் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தற்போது சில நாட்களுக்கு படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் சற்று ரிலாக்ஸ் ஆன மம்முட்டி, எர்ணாகுளத்தில் உள்ள தான் படித்த சட்டக்கல்லூரிக்கு விடுமுறை தினத்தன்று ஒரு விசிட் அடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் படித்த அந்த கல்லூரியில் தன்னுடைய வகுப்பறைக்கு சென்று அமர்ந்து தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் மம்முட்டி. “நாங்கள் படிக்கும் காலத்தில் இங்கே தான் எங்கள் ஆட்டமும் பாட்டமும் நடக்கும்.. அதே சமயம் இது ஒரு பழைய சட்டசபை போலவும் நீதிமன்றம் போலவும் கூட இருந்தது” என்று தனது மலரும் நினைவுகளை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் மம்முட்டி. அவரது ரசிகர்களிடையே இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..




