நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் சார்பாக பொது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் , தன்னுடைய பெயர், புகைப்படம் , குரல் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது, என்றும் மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வழக்கறிஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் , குரல் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதனால் மக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினிகாந்தின் அனுமதி இன்றி அவரது குரல், புகைப்படம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.