திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் தற்போது பாந்தரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார் நடிகை தமன்னா. ஏற்கனவே திலீப் நடிப்பில் ராம்லீலா என்கிற நூறு கோடி வசூல் படத்தை கொடுத்த இயக்குனர் அருண்கோபி தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் திலீப்பின் 148 ஆவது படத்திற்கான பூஜை கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல இயக்குனர் ஜோஷி, நடிகர் மனோஜ் கே.ஜெயன் ஆகியோருடன் நடிகர் ஜீவாவும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை பிரணிதா சுபாஷும் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.. தங்கள் நிறுவனம் தயாரிக்கிறது என்பதால் ஜீவா கலந்து கொண்டாரா அல்லது அவரும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்கிற விபரம் எதுவும் வெளியாகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய உடல் என்கிற படத்தை இயக்கிய ரதீஷ் ரகுநந்தன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கோட்டயம் பகுதியில் ஜன-28 (இன்று) முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.