500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் |
மாண்டியா : குடியரசு தினத்தை அவமதித்ததாக நடிகை ரச்சிதா ராம் மீது மத்துார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் தர்ஷன், ரவிசந்திரன், நடிகை ரச்சிதா ராம் ஆகியோர் நடித்த கிராந்தி திரைப்படம், வரும் 26ம் தேதி குடியரசு தினம் அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய அவர், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை மறந்து விடுங்கள். 'கிராந்தி' யோத்வசாவை கொண்டாடுங்கள்' என பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கர்நாடக மாநில அறிவியல் அராய்ச்சி கவுன்சில் தலைவர் சிவலிங்கய்யா, மத்துார் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில், 'இந்தியா சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகிறது. நம் நாட்டின் அரசியல் சாசனம் ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரச்சிதா ராம், 'குடியரசு தினத்தை மறந்துவிட்டு, 'கிராந்தி'யை கொண்டாட வேண்டும்' என, பேசியுள்ளார். அரசியல் அமைப்புக்கு எதிரான வெளிப்படையான அறிக்கையானது, அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை அவமதிக்கும் செயலாகும். எனவே, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து, அவரை நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.