நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பொங்கலை முன்னிட்டு இரண்டு முன்னணி நடிகர்களான அஜித், விஜய் படங்கள் வெளிவந்தன. அப்படங்கள் பத்து நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால் நேற்று ஒரே ஒரு படம் தவிர வேறு எந்தப் படங்களும் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த வாரம் சில பல படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் டப்பிங் படங்களின் வரவுதான் அதிகம் இருக்கும் எனத் தெரிகிறது.
ஷாரூக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள 'பதான்' படம் தமிழிலும் டப்பிங் ஆகி 25ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டு, முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டது. மம்முட்டி, ரம்யா பாண்டியன் நடித்து மலையாளத்தில் வெளியான 'நண்பகல் நேரத்து மயக்கம்' படம் டப்பிங் ஆகி அடுத்த வாரம் வெளியாகலாம். அதேப்போல, உன்னி முகுந்தன் நடித்து டிசம்பர் 30ம் தேதி மலையாளத்தில் வெளியான 'மாளிகப்புரம்' படமும் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹான்' படம் ஜனவரி 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “கெழப்பய, மெய்ப்பட செய்' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள படங்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.