விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
மலையாள திரையுலகில் 10 ஆண்டுகளில் நேரம், பிரேமம் சமீபத்தில் வெளியான பிரித்விராஜ், நயன்தாரா நடித்த கோல்டு என வெறும் மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தனது ரசிகர்களுடன் உரையாடும் அல்போன்ஸ் புத்ரனிடம் சமீபத்தில் ஒரு ரசிகர், அஜித்தை வைத்து நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்டார்.
அதற்கு தனது நீண்ட நாள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அல்போன்ஸ் புத்ரன், “10 ஆண்டுகளுக்கு மேலாக அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்து வருகிறேன். இதுவரை எட்டு முறை சந்திக்கும் முயற்சியை எடுத்து கை கூடாமல் போனது. எனது பிரேமம் படம் வெளியானபோது படத்தின் நாயகன் நிவின்பாலியை போனில் தொடர்பு கொண்டு அஜித் பாராட்டினார்.
அப்படி அவரது பாராட்டை கூட இன்னொருவர் மூலமாக கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன். அஜித்தின் மேலாளர் உள்ளிட்ட இன்னும் அஜித்துக்கு நெருக்கமான சிலர் மூலமாக இப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். எனக்கு வயதாவதற்குள் எப்படியாவது அஜித்தை சந்தித்து விடவேண்டும்.. எனக்கு அஜித் படத்தை மட்டுமல்ல கமல், விஜய் ஆகியோரின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தியேட்டர்களிலும் 100 நாட்களுக்கு குறையாமல் ஓடும் படமாக அது இருக்கும் என்று கூறியுள்ளார்.