திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் படங்கள் இல்லை என்றாலும், பிற மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் அவர் நடித்த வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் நடித்த வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் தற்போது திரைக்கு வந்துள்ளன. அடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்தின் புரமோஷன் ஐதராபாத்தில் நடைபெற்றபோது அதில் ஸ்ருதிஹாசன் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கு மனநல பிரச்னை ஏற்பட்டதின் காரணமாகத்தான் அவர் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அது குறித்து உடனடியாக ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், ‛‛எனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதினால் தான் வால்டர் வீரய்யா படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். மேலும், மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் பரப்பப்பட்ட செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து, நல்ல முயற்சி என்றும் அதற்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.