நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பஹத் பாசில் தற்போது முதல்முறையாக கன்னட திரை உலகில் நுழைந்து தூமம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகியாக நடிக்கும் அபர்ணா பாலமுரளியும் முதன் முறையாக கன்னட திரை உலகில் நுழைந்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பவன்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக விவியன் ராதாகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் டாக்குமெண்ட்ரி பட இயக்குனரும் கூட. தற்போது இவர் மீது கர்நாடகாவை சேர்ந்த மாடல் ஒருவரும் மாடல் ஒருங்கிணைப்பாளரும் என இரண்டு பெண்கள் மீ டூ புகார் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்து அந்த மாடல் அழகி சோசியல் மீடியா பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள பதிவில், டாக்குமென்ட்ரி படப்பிடிப்பு சமயத்தில் விவியன் ராதாகிருஷ்ணன் தனது உடலில் தொடக்கூடாத பகுதிகளை தொட்டதாகவும் மேலும் அவரது உடலை தனது உடல் மேல் படச்செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அந்த மாடல் ஒருங்கிணைப்பாளர் கூறும்போது விவியன் ராதாகிருஷ்ணனுடன் பணியாற்றிய நாட்களில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல தொல்லைகளுக்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.