இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

90களில் தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வந்தவர் ஜெகபதிபாபு. கடந்த பத்து வருடங்களாக குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டு தென்னிந்திய அளவில் மிகவும் பிசியான நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஏஎஸ் ஆக வேண்டுமென்பதை லட்சியமாக கொண்டுள்ள தூய்மைப் பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது படிப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார் ஜெகபதிபாபு.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயலட்சுமி என்கிற மாணவி, தான் படித்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் சிவில் தேர்வுகளுக்கு தயாராவதற்கான பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்படுவதாகவும் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்த ஜெகபதிபாபுவின் தாயார் இது குறித்து தனது மகனிடம் கூறி அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அந்தப்பெண்ணை சந்தித்த ஜெகபதிபாபு, அவர் ஐஏஎஸ் படிப்பை முடிப்பதற்கு தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.