ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மம்முட்டி நடித்து முடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். அடுத்து ஸ்படிகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 2023ம் ஆண்டின் முதல் படத்தை அவர் அறிவித்துள்ளார்.
இது மம்முட்டி தயாரிக்கும் 4வது படம். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ராபி வர்க்கீஸ் ராஜ் இயக்குகிறார். படத்திற்கு ஷாபி திரைக்கதை அமைக்கிறார், ரோனி டேவிட் ராஜ் வசனம் எழுதுகிறார். முகமது ரஹில் ஒளிப்பதிவு செய்கிறார். சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
இது ஒரு துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். படத்தின் துவக்க விழா நடந்தது. இதில் மம்முட்டி கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் கருப்பு சட்டையுடன் கலந்து கொண்டது பற்றிய விவாதங்கள் தொடங்கி உள்ளது.