மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி |
'வெந்து தணிந்தது காடு' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பத்து தல'. கவுதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்று மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பத்து தல படத்தின் டப்பிங்கை ஒவ்வொருவராக முடித்து வருகின்றனர். சமீபத்தில் கவுதம் கார்த்திக் டப்பிங்கை முடித்தார். இப்போது பிரியா பவானி சங்கர் டப்பிங்கை நிறைவு செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.