Advertisement

சிறப்புச்செய்திகள்

‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வழுக்கி விழுவோமோ என பயந்தேன் : ஷோபனாவின் மலரும் நினைவுகள்

27 டிச, 2022 - 07:59 IST
எழுத்தின் அளவு:
Shobana-flashback-about-oru-murai-vanthu-parthaya-song

எண்பது, தொண்ணூறுகளில் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. தமிழில் தளபதி, பாட்டுக்கு ஒரு தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஷோபனா மலையாளத்தில் நடித்த மணிசித்திரதாழு படம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு படம். அந்த படத்தில் அவரது நடிப்பும் குறிப்பாக கிளைமாக்ஸில் அவர் ஆடும் அந்த நடனமும் வெகு பிரசித்தம்.

அந்த படத்தில் கங்கா மற்றும் நாகவல்லி என்கிற கதாபாத்திரங்களில் நடித்திருந்த ஷோபனா நாகவல்லி கதாபாத்திரமாக மாறி 'ஒரு முறை வந்து பார்த்தாயா' என்கிற தமிழ் பாடலுக்கு கிளைமாக்ஸில் ஆவேசமாக நடனமாடி இருப்பார். தற்போது தான் நடத்தி வரும் நடன பயிற்சி பள்ளியில் தனது மாணவிகளுக்கு அந்த பாடலுக்கான நடனத்தை சொல்லித்தரும் ஷோபனா, அதுகுறித்தும் அந்த பாடல் படமாக்கப்பட்ட சமயத்தில் நடந்த விஷயங்கள் குறித்தும் ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் ஷோபனா கூறும்போது, “அந்த பாடல் நவராத்திரி மண்டபத்தில் படமாக்கப்பட்டது. அதன் தரைத்தளம் முழுவதும் ஜொலிக்கும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெய் சேர்த்து துடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதில் துள்ளிக்குதித்து நடனமாடுவதற்கு எனக்கு பயமாக இருந்தது. வழுக்கி விழுந்து விடுவோமோ என்கிற அளவிற்கு தரை மிகவும் வழுவழுப்பாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல என்னுடன் ஆடிய ஸ்ரீதருக்கும் அந்த பயம் இருந்தது. இருந்தாலும் சமாளித்து ஆடினோம்” என்று கூறியுள்ளார்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முதன்முறையாக கன்னடத்தில் நுழைந்த கல்யாணி பிரியதர்ஷன்முதன்முறையாக கன்னடத்தில் நுழைந்த ... விஜய்யின் சினிமா, அரசியல் பற்றி எதுவும் தெரியாது : ஷோபா சந்திரசேகர் பேட்டி விஜய்யின் சினிமா, அரசியல் பற்றி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in