கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய சந்தானம் சமீப காலத்தில் வித்தியாசமான முயற்சி என்கிற பெயரில் குலு குலு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகிய படங்களில் நகைச்சுவையை குறைத்து சீரியசான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் அவை ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது புது வருடத்தை கொண்டாடும் விதமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு சுற்றி வருகிறார் சந்தானம். அந்த வகையில் சமீபத்தில் புலியுடன் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்ட சந்தானம் அதற்காக தற்போது சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.
வெளிநாட்டில் புலிகள் காப்பகம் ஒன்றில் உறங்கும் புலியின் வாலை பிடித்து இழுத்தபடி இதுதான் புலியின் வாலை பிடிக்கிறது என்பதா என்கிற கேப்ஷனுடன் ஒரு வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தானம். ஆனால் அந்த வீடியோவில் அந்த உறங்கும் புலியின் தலையில் அதன் பயிற்சியாளர் சிறிய தடியால் தட்டுகிறார். புலியும் சற்று உறுமியபடி எழுந்து பின் மீண்டும் அமைதியாக உறங்குகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படி வனவிலங்குகளை துன்புறுத்துவதை சந்தானம் ஆதரிக்கிறாரா ? ஒருவர் புலியை தடியால் தாக்கும்போது அது குறித்து சந்தானம் தனது எதிர்ப்பை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டபின் இந்த வீடியோவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த பின்னும் கூட ஏன் இன்னும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து அதை நீக்காமல் இருக்கிறார் என்பது போன்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேவையில்லாத ஒரு விஷயத்தில் தலையிடுவதை புலி வாலை பிடித்தது போன்று பிரச்சினையில் சிக்கிக்கொண்டான் என்பார்கள்.. ஆனால் இங்கே சந்தானமோ தற்போது புலியின் வாலையே பிடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பதுதான் இது ஹைலைட்.