100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்துவுடன் சண்டை போட்டதன் காரணமாக மக்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்தார் தனலெட்சுமி. இருப்பினும் அடுத்தடுத்த வாரங்களில் தன்னை திருத்திக் கொண்டு நன்றாக விளையாடி வந்தார். கடந்த வார எலிமினேஷனில் தனலெட்சுமி யாரும் எதிர்பாரத வகையில் வெளியேற்றப்பட்டதால் பிக்பாஸ் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். நாமினேஷனில் இடம்பெற்ற கதிரவன், ரட்சிதா, மைனா ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே சேப் கேம் விளையாடி தப்பித்து வந்ததால் அவர்களில் யாராவது ஒருவர் தான் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முற்றிலும் மாறாக நன்றாக விளையாடி வந்த தனலெட்சுமி வெளியேற்றப்பட்டதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தனலெட்சுமிக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர். சேவ் தனா ஹேஷ்டேக்கும் டிரெண்ட்டானது. இருப்பினும் இறுதியில் தனலெட்சுமி எலிமினேட் செய்யப்பட்டதால் பிக்பாஸ் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், தப்பான கேம் பற்றி பேசும் கமல்ஹாசனே இப்படி தப்பான எலிமினேஷனை செய்யலாமா? என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.