அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் | கல்கி கன்னட உரிமையை கைப்பற்றிய யஷ் பட நிறுவனம் | தோனி சாயலில் பாகுபலி : ஒப்புக்கொண்ட ராஜமவுலி |
மாஸ்டர் படத்தைக் அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. என்றாலும் அது குறித்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அந்த பூஜையில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு இந்த படத்தில் நடிப்பதாக ஏற்கனவே பல நடிகர்களின் பெயர்கள் வெளியான போதும், அப்போதெல்லாம் பிரியா ஆனந்தின் பெயர் வெளியாகவில்லை. ஆனால் இப்போது அவர் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் அவரும் விஜய் 67 வது படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரியா ஆனந்த் இணைந்தால் இது விஜய்யுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும். தற்போது தமிழில் அந்தகன், சுமோ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த் .