விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் |
15வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் திரையிட சீனு ராமசாமியின் 'மாமனிதன்', கார்த்திக் சுவாமிநாதனின் 'முகிழ்', ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் 'இரவின் நிழல்', கவுதம் ராமச்சந்திரனின் 'கார்கி', மற்றும் எம் பத்மகுமாரின் 'விசித்திரன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
இதை தவிர சஞ்சீவ் ஹசாரிகா இயக்கத்தில் ரினிகி புயன் சர்மா தயாரித்த அசாமிய திரைப்படமான 'போகுல் புலோர் டோரே', சிதம்பர பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'தி ஒன் அண்ட் தி மெனி வித்தின்', சௌம்யாஜித் மஜும்தாரின் பெங்காலி படம் 'ஹோம்கமிங்', கிரீஷ் மோஹிதேவின் மராத்தி படம் 'தாத் கானா', ஜோஷி மேத்யூவின் 'நெஸ்ட் ஆஃப் சோரோஸ்' மலையாளப் படம், ஷெர்ரி மற்றும் தீபேஷ் டியின் மலையாளப் படம் 'அவனோவிலோனா' மற்றும் இஷான் கோஸின் பெங்காலி படம் 'ஜில்லி' ஆகியவையும் திரையிடப்படுகிறது.
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரச்சார சுடர் நிகழ்ச்சி நடந்தது. அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. பார்த்திபன், சீனு ராமசாமி, ஆர்.கே.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.