படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
முன்னணி பத்திரிகை நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்தவர்களுக்கு 'ட்ரூ லெஜண்ட்க் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கலைத்துறையில் இருந்து கொண்டே சமூக பணியாற்றி வரும் ராம் சரணுக்கு 'பியூச்சர் ஆப் யங் இந்தியா' விருது வழங்கி கவுரவித்தது.
இந்த விழாவில் ராம்சரண் பேசியதாவது: 1997ம் ஆண்டு எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ரத்தம் கிடைக்காமல் இறந்துவிட்டார். என் அப்பா (சிரஞ்சீவி) ஏற்கனவே மெகா ஸ்டார். கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் ஒருவர் ரத்தம் கிடைக்காமல் இறந்தது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு அடுத்த வருடமே என் அப்பா ரத்த வங்கியைத் தொடங்கினார்.
இதேபோல், கோவிட் நேரத்தில் திரைப்பட தொழிலாளர்கள் 17 ஆயிரம் பேருக்கு உதவி செய்தோம். அது ஒரு சிறிய உதவி. அவர்களுக்கு அது மிகவும் தேவைப்பட்டது. நான் செய்து வரும் எல்லா பணிகளும் என் தந்தை தொடங்கி வைத்தது. வருங்காலங்களில் நானும் சில பணிகளை தொடங்க முடிவு செய்திருக்கிறேன். இந்த விருதை எனது பெற்றோர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு ராம் சரண் பேசினார்.