அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
பிக்பாஸ் சீசன் 4-ல் ஷிவானி நாரயணனுக்கும், பாலாஜி முருகதாஸுக்கும் இடையே ஆரம்பத்தில் லவ் ட்ராக் ஆரம்பமானது. ஆனால், அதற்குள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஷிவானியின் அம்மா, ஷிவானியை கண்டித்தார். அதன்பின் அந்த விவகாரம் குறித்து பெரிதாக பேசப்படவில்லை. ஆனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு ஷிவானியும், பாலாஜியும் தங்களது நட்பை வளர்த்தனர். ஒருகட்டத்தில் ஷிவானியின் தாயாரும் பாலாஜியை புரிந்துகொள்ள மூவரும் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்ந்து கொண்டனர். ஒன்றாக சேர்ந்து செல்பி புகைப்படங்கள் எடுத்து அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், பாலாஜி முருகதாஸின் பர்த்டே பார்ட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில், ஷிவானியுடன் அவரது தயாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படமானது வைரலாகி வரும் நிலையில் 'மருமனுடன் செல்பியா' என ஷிவானியின் அம்மாவை ஜாலியாக கேலி செய்து வருகின்றனர்.