நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? | 'ஒரு நொடி' இயக்குனரின் அடுத்த படம் தொடங்கியது | மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் கே முரளிதரன்(65) மாரடைப்பு காரணமாக கும்பகோணத்தில் காலமானார்.
லக்ஷமி மூவி மேக்கர்ஸ் சார்பில் சுவாமிநாதன் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களை தயாரித்தவர் கே.முரளிதரன். ‛‛அரண்மனை காவலன், மிஸ்டர் மெட்ராஸ், கோகுலத்தில் சீதை, தர்மச் சக்கரம், பிரியமுடன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, உன்னை நினைத்து, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை, சிலம்பாட்டம்'' உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தனது நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். ஏராளமான படங்களை விநியோகமும் செய்துள்ளனர். கடைசியாக சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த சகலகலா வல்லவன் படத்தை தயாரித்தார். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பொறுப்பு வகித்துள்ளார்.
சில ஆண்டுகளாக படங்கள் தயாரிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் முரளிதரன். இந்நிலையில் கும்பகோணத்தில் வசித்து வந்த முரளிதரன் மாரடைப்பு காரணமாக மறைந்தார். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் வட்டத்தில் குறிப்பாக தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.