அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வன் நீண்ட இடைவெளிக்கு பின் அருமையான கதையுடன் மீண்டும் சீரியல் உலகை கலக்கி வருகிறார். 'கோலங்கள்' சீரியலை இயக்கி பிரபலமான அவர் தற்போது 'எதிர்நீச்சல்' சீரியலை இயக்கி வருகிறார். கோலங்கள் தொடரில் கதாநாயகி மற்றும் இதர பெண்களின் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பல குடும்ப பெண்களை கவர்ந்தது. தற்போது எதிர்நீச்சல் தொடரும் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் சிறப்பான கதையம்சத்துடன் பல தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த் எதிர்நீச்சல் சீரியல் குறித்து பெருமையாக பேசியுள்ளார். இயக்குநர் திருச்செல்வத்தின் நண்பர், ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இதன் மூலம் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ரஜினிகாந்தை திருச்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது 'எதிர்நீச்சல் சீரியல் தான் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த சீரியலை எனது குடும்பத்தினர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்' என்று கூறி ரஜினிகாந்த் திருச்செல்வத்தை பாராட்டியுள்ளார். இந்த சம்பவத்தை இயக்குநர் திருச்செல்வமே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.