‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிக்பாஸ் வீட்டில் தனது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டி வரும் அசீம், இந்த வாரம் அத்துமீறி அமுதவாணனை பிடித்து தள்ளிவிட்டார். இதனால் இருவருக்குமிடையே பெரிய அளவில் வாக்குவாதம் நடந்தது. தொடர்ந்து பேசிய அசீம் 'நெஞ்சில உரம் இருந்தா என்ன அடிடா' என ஆவேசமாக பேசி கத்தினார். அசீமின் இந்த செயலை பலரும் தற்போது கண்டித்து வருவதுடன், அசீமிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், கேமரா முன் பேசிய அசீம் 'நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகனும். வீடே எனக்கு எதிரா இருக்கும் போது தொடர்ந்து இந்த விளையாட்ட விளையாட நான் விரும்பல' என கூறியுள்ளார். மேலும், அமுதவாணனை அடித்தது குறித்து பேசிய அசீம் 'அந்த சண்டை கோபத்தால நடந்தது. அதை தயவு செஞ்சு டெலிகாஸ்ட் பண்ணிடாதீங்க ப்ளீஸ். அது டெலிகாஸ்ட் ஆச்சுனா ரொம்ப பெரிய விஷயமா மாறிடும். என்னோட பெயர் கெட்டு போய்டும்' என பிக்பாஸிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.