இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் கண்டு கொள்ளப்படவில்லை என்றாலும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்' என இரண்டு பெரிய வெற்றிகளை அடுத்தடுத்து கொடுத்து பலரையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் பொன்ராம். அதற்குடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'சீமராஜா, எம்ஜிஆர் மகன்' ஆகிய இரண்டு படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன.
அடுத்தடுத்த தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிஎஸ்பி' படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த வாரம் டிசம்பர் 2ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. எத்தனையோ போலீஸ் கதைகளை தமிழ் சினிமா பார்த்து விட்டது. இந்த 'டிஎஸ்பி' என்ன செய்துள்ளார் என்பதை இரண்டு நாட்களில் தெரிந்து கொள்ளலாம். இந்தப் படம் வெற்றி பெற்றால்தான் தமிழ் சினிமாவில் இழந்த தனது இடத்தை பொன்ராம் மீண்டும் பிடிக்க முடியும்.
விஜய் சேதுபதிக்கும் இந்தப் படம் முக்கியமான படம்தான். '96' படத்திற்குப் பிறகு அவர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் எதுவுமே அந்த அளவிற்குப் பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெறவில்லை. இந்த வருடம் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்களில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் மட்டுமே சுமாரான வெற்றியைப் பெற்றது. வில்லனாக நடித்த 'விக்ரம்' பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே, இந்த 'டிஎஸ்பி'யின் வெற்றியை விஜய் சேதுபதியும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.