மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம், அதையடுத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கினார். இதில் சீமராஜா, எம்ஜிஆர் மகன் படங்கள் தோல்வியடைந்தன. தற்போது அவர் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பொன்ராம் அளித்துள்ள ஒரு பேட்டியில், விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ரஜினி முருகன் இரண்டாம் பாகம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கூறியபோது இதில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால் தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகிய இருவருமே இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.