நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம், அதையடுத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கினார். இதில் சீமராஜா, எம்ஜிஆர் மகன் படங்கள் தோல்வியடைந்தன. தற்போது அவர் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பொன்ராம் அளித்துள்ள ஒரு பேட்டியில், விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ரஜினி முருகன் இரண்டாம் பாகம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கூறியபோது இதில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால் தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகிய இருவருமே இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.