சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் வணங்கான். இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். மீனவர்கள் பிரச்னையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதம் ஆகி வந்தது.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும் என்பதால் தற்போது மீண்டும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து துவங்கும் படப்பிடிப்பை ஒரேக்கட்டமாக முடிக்க பாலா - சூர்யா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.