நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் துல்கர் சல்மான் கடந்த சில ஆண்டுகளாகவே கமர்சியல் படங்களை குறைத்துக் கொண்டு வித்தியாசமான கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அதனால் தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட்டிலும் அவருக்கு வரவேற்பு இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் அவரது நடிப்பில் வெளியான சீதாராமம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக ஹிந்தியில் தற்போது அவர் நடித்துள்ள என்கிற 'சுப்' என்கிற திரைப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் திரையரங்குகளில் அல்ல... நேரடியாக ஓடிடி தளத்திலேயே வெளியாகிறது.
சீனி கம், பா, ஷமிதாப், பேடுமேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பால்கி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு கலைஞனின் பழிவாங்கல் என்கிற டேக் லைனுடன் இந்த படம் உருவாகியுள்ளது. அதற்கேற்றபடி இந்த படத்தில் முதன்முறையாக சீரியல் கில்லர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான். இந்தப்படம் இதுவரை தான் நடித்த படங்களிலேயே தனக்கு ஒரு பரிசோதனை முயற்சியான படம் என்றும் இது வழக்கமான ஒரு துப்பறியும் படமாக இல்லாது, ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிற, இதயத்தை நிறுத்தி துடிக்க வைக்கும் விதமான ஒரு திரில்லர் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் துல்கர் சல்மான்.
இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக சன்னி தியோல் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல பால்கியின் படங்களில் தொடர்ந்து இடம்பெற்று வந்த நடிகர் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழ் குணச்சித்திர நடிகை சரண்யா பொன்வண்ணனும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.