மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இங்கே இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கியுள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலா ஆகியோர் சமீபத்தில் ஒன்று கூடி மீண்டும் தங்களது படப்பிடிப்பு கொண்டாட்டங்களை மீட்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்த இரண்டு புகைப்படங்களை சோபிதா துலிபாலா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் இந்த அனைவரின் முகங்கள் குளோசப்பிலும் இன்னொரு புகைப்படத்தில் இவர்கள் ஐந்து பேரின் ஒற்றை பாதங்கள் குளோசப்பிலும் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்வில் எங்கே நந்தினியை காணவில்லை என்று ஐஸ்வர்யா ராய் பற்றியே தங்களது கமெண்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.