திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி | புதிய டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கினார் கிகி சாந்தனு | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்கு சினிமாவில் 48வது பிறந்தநாள் | தமயந்திக்கு கிளைமாக்ஸ் எழுதிய சீரியல் குழுவினர் : அதிர்ச்சியில் ரசிகர்கள் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய காரணம் என்ன? - மனம் திறக்கும் வெங்கடேஷ் பட் | ஜோதிடரான டிவி நடிகர் கோலங்கள் ஸ்ரீதர் | ஹெலிகாப்டரில் வந்து ஓட்டளித்த பவன் கல்யாண் |
53வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்படுகிறது. நேற்று நடந்த துவக்க விழாவில் நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி அனுராக் தாக்குர் விழாவை முறைப்படி துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ஆண்டுதோறும் சிறந்த சினிமா ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனையாளர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு அந்த விருதினை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பெறுகிறார். இதனை மத்திய தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இந்த விருதை வகீதா ரகுமான், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அமிதாப் பச்சன், சலிம்கான், பிஸ்வஜித் சட்டர்ஜி, ஹேமமாலினி, பரசூன் ஜோஷி ஆகியோர் பெற்றுள்ளனர்.