அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
ஆண்டுதோறும் ரீயூனியன் என்கிற பெயரில் 80-களில் முன்னணி நட்சத்திரங்களாக கோலோச்சிய நடிகர், நடிகைகள் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில்கூட இவர்களது சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பார்வதி அதிதி பாலன், பிரயாகா மார்டின் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் கெட் டு கெதர் என்கிற பெயரில் ஒன்றுகூடி ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த இளம் நடிகைகள் கொண்டாட்டத்திற்கு முன்னின்று தலைமை ஏற்று நடத்தியவர் கல்யாணியின் அம்மாவான சீனியர் நடிகை லிசி தான். இந்த சந்திப்பில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.