100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளை காப்பாற்றும் பணியை மேற்கொண்டுள்ளார். துல்கர் தனது அறக்கட்டளை மற்றும் தனது தயாரிப்பு நிறுவனமான வேபாரார் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் கைட்ஸ் அறக்கட்டளையோடு இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளார்.
'Wayfarer's Tree of Life' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், 100 ஏழை குழந்தைகளுக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. குழந்தைகளில் சிறுநீரகம், குடல் மற்றும் இருதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த திட்டம் மூலம் உதவி செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கான லோகோவை துல்கர் சல்மான் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். துல்கர் சல்மான் தனது அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.