திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
இயக்குனர் ஏ.எல்.விஜய், நடிகர் உதயா ஆகியோரின் சகோதரி மகன் ஹமரேஷ். மாநகரம், தெய்வதிருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் ரங்கோலி படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை கோபுரம் ஸ்டூடியோ சார்பில் கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். வாலி மோகன்தாஸ் இயக்குகிறார்.
பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வாலி மோகன்தாஸ் கூறியதாவது: தற்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம். சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன என்றார்.