Advertisement

சிறப்புச்செய்திகள்

வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரும்பிப் பார்த்தால் சரியான முடிவையே எடுத்திருக்கிறேன் - பாடலாசிரியர் தாமரை நெகிழ்ச்சி

14 நவ, 2022 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Yes-i-take-good-decision-says-Thamarai

பாடலாசிரியர் தாமரைக்கு கடந்த 10ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது. வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து தாமரை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி என வாழ்த்துவதற்கான அத்தனை வாய்ப்பிலும் வாழ்த்தித் தள்ளி விட்டார்கள். ஒரு திரைப்பட பிரபலத்துக்கு வாழ்த்து மழை வியப்பில்லை என்றாலும் அதிகம் முகம்காட்டாத, பாடல்கள் வாயிலாகவே அறியப்பட்ட எனக்கும் இவ்வளவு அன்பா?. யோசித்துப் பார்த்தால், திரைபிரபலம் என்பதைத் தாண்டி, முகமே தெரியாவிட்டாலும் என் பாடல்களினால் ஓர் ஆழ்ந்த அண்மையை உணர்ந்து வாழ்த்தியவர்களே ஏராளம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு, துறையை சட்டென்று மாற்றி திரைப்பாடலைத் தேர்ந்தெடுத்த போது திகிலாகத்தான் இருந்தது. இப்போது திரும்பிப் பார்த்தால், சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேனென்று புரிகிறது. துறையில் நான் சந்தித்த கூர்நெருக்கடிகளின்போது விட்டுவிட்டுப் போய்விடலாமா என்கிற சிந்தனை வந்ததுண்டு. அப்போதெல்லாம் என்னையே தேற்றிக் கொள்ள, 'நானும் விலகி விட்டால் அப்புறம் யார்தான் இந்தவகைப் பாடல்களை எழுதுவதாம் ? எத்தனைபேர் காத்திருக்கிறார்கள் என்று சமாதானம் சொல்லி இருத்திக் கொள்வேன். இன்றைக்கு, உள்ளபடிக்கே என் பாடல்களுக்காக எத்தனையோ பேர் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்று உணரும் போது 'ஒருபோதும் இவர்களை ஏமாற்றலாகாது' என்கிற எண்ணம் மேலோங்குகிறது.



பிறந்ததிலிருந்து ஐம்பதாண்டுகள் வரை வாழ்வை நோக்கிய பயணம். விளையாட்டு, படிப்பு திட்டங்கள், திருமணம், குழந்தை, குடும்பம், வீடு, வாகனம் என அனைத்தும் மேல்நோக்கிய பயணமே. ஐம்பதைத் தாண்டிய பிறகு அது மரணத்தை நோக்கிய பயணமாக மாறுகிறது. எல்லாம் ஆடி முடித்து அனுபவக் கொள்முதல் செய்தபிறகு ஒவ்வொரு நாளும் அருளப்பட்ட நாளே எனத் தோன்றி விடும். இனி எத்தனை நாள் இருக்கப் போகிறோமோ, அதற்குள் இன்னின்னது செய்து விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்கும்.

எனக்குச் சில ஆண்டுகளாகவே இந்தச் சிந்தனை வந்து விட்டது. ஏதேனும் உருப்படியாகச் செய்து விட்டுப் போக வேண்டும். 30 ஆண்டுகள் திரும்பிப் பாராத ஓட்டத்தில் நான் முதன்மையாக இழந்தது புத்தக வாசிப்பைத்தான். விட்டதைப் பிடிக்க வேண்டும், ஏராளமாகப் படிக்க வேண்டும், படித்ததைப் பயனுறும் வகையில் எல்லோருக்கும் பகிர வேண்டும் என்கிற ஆவல் ததும்புகிறது.

அடுத்ததாக விலங்குரிமைச் சிந்தனை. மனிதவுரிமைச் சிந்தனையின் நீட்சியே விலங்குரிமை. முடிந்தவரை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது எனக்கான கட்டாயக் கடமை. என் பிறந்தநாளன்று மழையினூடாக திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கக் கரையோரம் 20 கிமீ உள்ளடங்கிய சென்றாயன்பாளையம் கிராமத்தில் உள்ள சாய் விக்னேஷின் விலங்குக் காப்பகத்திற்குசென்று வந்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அங்கே, வெயிலிலும் மழையிலும் கூரையற்றுக் கிடந்த மாடுகள், எருமைகளுக்கு ஒரு கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தேன். சென்ற ஆண்டு நிறைவேறியது. 2 லட்சம் நன்கொடை அளித்து அப்பாவின் பெயரால் ஒரு கூடம் உருவாக்கினோம். இன்று மழையில் நனையாமல் அவை யாவும் உள்ளே பத்திரமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தோம். இன்னும் செய்ய வேண்டியது உள்ளது. ஒவ்வொன்றாகச் செய்வோம்.

எப்போதும் நல்லதன் பக்கம் நின்று நல்வழியிலேயே நடந்திருக்கிறேன். இனியும் அப்படியே என்று என் அன்பார்ந்த சமூகத்துக்குச் சொல்லிக் கொள்கிறேன். என்னை வாழ்த்திய அத்துணை நல்ல இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு தாமரை எழுதியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
அவதூறு பரப்பினால் நடிவடிக்கை பாயும்: பார்வதி நாயர் எச்சரிக்கைஅவதூறு பரப்பினால் நடிவடிக்கை ... ரங்கோலியில் பள்ளி மாணவர்களின் கதை ரங்கோலியில் பள்ளி மாணவர்களின் கதை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17 நவ, 2022 - 06:05 Report Abuse
NicoleThomson இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி
Rate this:
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
16 நவ, 2022 - 10:25 Report Abuse
Ramalingam Shanmugam வாழ்த்துக்கள்
Rate this:
Sutha - Chennai,இந்தியா
16 நவ, 2022 - 07:10 Report Abuse
Sutha என்றும் நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Nadarajah packianathan - ANDILLY,பிரான்ஸ்
15 நவ, 2022 - 23:47 Report Abuse
Nadarajah packianathan காலை வணக்கம் அம்மா, முதல்கட்டமாக உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் அருளால் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். நீங்கள் செய்யும் சமூகப்பணி தொடர்ந்து செய்து கைகூட இறைவன் அருள் புரியட்டும். வாயில்லா ஜீவன்கள் உங்களை வாழ்த்தும். இது எல்லாம் நாம் தேடும் புண்ணியம். உங்கள் குடும்பம், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
15 நவ, 2022 - 20:50 Report Abuse
N Annamalai இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞரே .இன்னும் நல்லது செய்ய்ய நீடுழி வாழ வாழ்த்துகிறேன் .
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in