ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை |
‛வத்திக்குச்சி' பட இயக்குனர் கிங்ஸிலின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛டிரைவர் ஜமுனா'. பெண் கால்டாக்ஸி ஓட்டுனரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, ஒரேநாளில் படத்தின் கதை நடப்பது போன்று சஸ்பென்ஸ் நிறைந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாளை (நவ., 11) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டள்ள அறிக்கை : ‛‛நவ., 11ம் தேதியன்று வெளியாவதாக இருந்த எங்கள் டிரைவர் ஜமுனா படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. தாமதத்திற்கு வருந்துகிறோம். மிக விரைவில் படத்தை உங்களின் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களின் மேலா ஆதரவிற்கும், அன்பிற்கும் தலை வணங்குகிறோம்''.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் வெளிவந்த படங்களில் ‛லவ் டுடே, நித்தம் ஒரு வானம்' படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் இந்தவாரமும் அந்த படங்கள் தியேட்டர்களில் தொடருகின்றன. நாளை ‛மிரள், யசோதா, பரோல்' ஆகிய படங்களுடன் ‛டிரைவர் ஜமுனா' படமும் வெளி வருவதாக இருந்தது. ஆனால் குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைத்ததால் டிரைவர் ஜமுனா படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.