ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

பெங்களூரு : மூத்த திரைப்பட நடிகர் லோஹிதாஸ்வா, மாரடைப்பால் பெங்களூரில் நேற்று காலமானார்.
கன்னட திரையுலகின் மூத்த நடிகர் லோஹிதாஸ்வா, 80. பெங்களூரில் வசித்து வந்த இவருக்கு, அக்டோபர் 10ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே அவுட்டில் உள்ள சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
துமகூரு தொண்டகரேவை சேர்ந்த லோஹிதாஸ்வா, திரைப்பட நடிகர் மட்டுமின்றி, நுாற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தவர். ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றியவர். அபிமன்யூ, ஏ.கே.47, அவதார புருஷா, சின்னா, ஹொச நீரு, கஜேந்திரா, விஸ்வா, பிரதாப், போலீஸ் லாக்கப், ரெடிமேட் கண்டா, ஸ்நேகா லோகா, சுந்தரகாண்டா, சிம்ஹத மரி, மூரு ஜன்மா, டைம் பாம் உட்பட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
'டிவி' தொடர்களிலும் நடித்து, லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர். இவரது இறப்பிற்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லோஹிதாஸ்வா உடல், குமாரசாமி லே அவுட்டில் உள்ள வீட்டில் இன்று காலை 7:30 மணி முதல் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட உள்ளது. பின், சொந்த கிராமத்தில் இறுதி சடங்கு நடத்தப்படுவதாக அவரது மகன் சரத் தெரிவித்தார்.