ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

நாடக நடிகையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் கொச்சின் அம்மினி. 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். அதோடு பாடகியாகவும், பின்னணி குரல் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். பூர்ணிமா பாக்யராஜ் நடித்த மலையாள படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் இவர். குறிப்பாக மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் இவரின் பின்னணி குரல் அப்போது வெகுவாக ரசிக்கப்பட்டது.
பிற மொழி நடிகைகள் நடிக்கும் மலையாள படங்களுக்கு இவர் குரல் கொடுத்து வந்தார். குறிப்பாக சாரதா, கே.ஆர்.விஜயா, விஜயநிர்மா ஆகியோருக்கு ஆஸ்தான பின்னணி குரல் கலைஞராக இருந்தார். 80 வயதான அம்மனி முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.