அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஆந்திராவின் குண்டூரில் உள்ள இப்டாம் எனும் கிராமத்தில் உள்ள சில வீடுகள் சாலை விரிவாகத்திற்காக இடிக்கப்பட்டது. இவர்கள் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேவா கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல பவன் கல்யாண் தொண்டர்கள் புடைசூழ சென்றார். அவர் சென்ற விதம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தனது காரில் அவர் மேற்கூரையில் அமர்ந்தபடி . சாவகாசமாக கால்களை நீட்டி உட்கார்ந்தபடி சென்று கொண்டிருந்தார். அவரது காரில் அவருடைய கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று கொண்டிருந்தனர். அவர்களும் பாதுகாப்பற்ற முறையில் தொங்கிக் கொண்டே நின்றிருந்தனர். டிரோன் கேமரா பதிவு, வீடியோகிராபர், போட்டோகிராபர் புடைச் சூழ பவன் பயணித்திருக்கிறார்.
தெலுங்கு படத்தின் வில்லன்கள் பாணியில் அவர் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது சாலை விதிகளை மீறியது தொடர்பான வழக்கு தொடர ஆந்திர போலீசார் முடிவு செய்துள்ளனர்.