நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சமூக வலைதளங்களில் பல பிரபலங்களின் பெயர்களில் அதேபோன்று பல பேர் கணக்கு துவங்கி நிர்வகித்து வருவதால் சில சமயம் குழப்பங்களும், சில சமயம் பிரச்சனைகளும் ஏற்படுவதுண்டு. அப்படித்தான் நடிகர் கமலுக்கு நேற்று இதேபோன்ற ஒரு பெயர் குழப்பம் ஏற்பட்டு தனது அபிமான இயக்குனர் என நினைத்து ஒரு ரசிகருக்கு பதிலளித்துள்ள சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கமல் தற்போது தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் தவறு செய்த சில போட்டியாளர்களை சற்றே கடுமையாக கண்டித்தார். இது பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து பாராட்டும் விதமாக மவுலி எனும் இளைஞர் கமலுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்.
அதற்கு பதிலளித்த கமல், “யாரையும் புண்படுத்தாமல், அநாகரிக வார்த்தைகள் பேசாமல், நகைச்சுவையால் அனைவரையும் ஈர்த்த நல்ல தலைவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தீர்கள். நம்மிடையே நிறைய ஜென்டில்மேன்கள் கொண்ட வரிசை இருக்கிறது. அதில் உங்களுக்கு அடுத்ததாக நானும்” என்று கூறியிருந்தார்.
மவுலி என்கிற பெயரை பார்த்ததும் கமல்ஹாசன், தனது நண்பரும், தான் நடித்த பம்மல் சம்பந்தம் மற்றும் தனது தயாரிப்பில் உருவான நளதமயந்தி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், நடிகருமான மவுலி என தவறுதலாக நினைத்து பதில் அளித்துள்ளார்.
இப்படி கமல்ஹாசன் பதில் அளித்தது குறித்து நெட்டிசன்கள் பலரும் கமல் இப்படி தவறாக நினைத்து விட்டதை சுட்டிக்காட்டி பதிவிட்டனர். அது கமலின் கவனத்துக்கு சென்றதும், இயக்குனரும், மூத்த நடிகருமான திரு. மெளலி என தவறுதலாக நினைத்துவிட்டேன். இருந்தாலும், தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி என்று கூறி கமல் அதை சமாளித்தார்.
இதற்கு பதில் அளித்த சம்பந்தப்பட்ட அந்த மவுலி என்கிற நெட்டிசன், “இதை அடையாள தவறால் நிகழ்ந்த நகைச்சுவையாக நான் கருதுகிறேன். ஆனாலும் என்னுடைய செய்தி உங்களை அடைந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இதையே எனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சினிமாவில் தொடர்ந்து எங்களை போன்றவர்களை உற்சாகப்படுத்தும் பணியை தொடர்ந்து செய்யவும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்