மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்டு மகாத்மாக காந்தி அகிச்சை வழியில் போராடிய போது, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடியவர் சுபாஷ் சந்திர போஸ். அந்த ராணுவத்தில் பெண் உளவாளியாக இருந்தவர் நீரா ஆர்யா. அவரது வாழ்க்கை இப்போது நீரா ஆர்யா என்ற பெயரிலேயே திரைப்படமாக தயாராகிறது. இதில் நீரா ஆர்யாவாக கன்னட நடிகை ரூபா அய்யர் நடிக்கிறார். அவரே படத்தை இயக்கவும் செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாம் கொண்டாட வேண்டிய ஒரு தேசப்போராளியின் சரித்திர கதையில் நான் நடிக்கிறேன். ஐஎன்ஏவின் முதல் பெண் உளவாளி நீரா. அவரது கணவர் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்த போதிலும், அவர் நாட்டிற்காக போராடினார். சுபாஷ் சந்திரபோஸின் இருப்பிடம் பற்றிய தகவலை அவர் தெரிவிக்க மறுத்ததால் அவரது மார்பகங்கள் வெட்டப்பட்டன. தேசத்துக்காக தன் கணவனையே கொன்றவர். ஆனால் தன் கடைசி காலத்தில் பூ விற்று வாழ்க்கை நடத்தியவர்.
ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் படத்தின் கதை சொல்லப்படும். 1940களில் நடந்த உண்மையான சம்பவங்கள் காட்சியாக விரியும். இதற்காக நிறைய ஆய்வுகள் செய்து திரைக்கதை அமைத்துள்ளேன். சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்படுகிறது. லண்டன் மற்றும் அந்தமான் சிறையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. என்றார் ரூபா அய்யர்.
ரூபா அய்யர் சிறந்த இயக்குனருக்கான விருதை இரண்டு முறை கர்நாடக அரசிடம் பெற்றவர். இதுவரை 5 திரைப்படங்களை தயாரித்துள்ளார், 4 படங்களை இயக்கி உள்ளார். 20 விளம்பர படங்களை இயக்கி உள்ளார்.