ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகமே கூட 'காந்தாரா' படம் இப்படி ஒரு வசூலை அள்ளும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த பல ஆண்டுகளாக கன்னட சினிமாவைக் கண்டு கொள்ளாமல் இருந்த சினிமா ரசிகர்களை தங்கள் பக்கம் முழுவதுமாகத் திருப்பியது 'கேஜிஎப்' படம். அதற்குப் பின் இந்த ஆண்டு வெளிவந்த அதன் இரண்டாம் பாகமான 'கேஜிஎப் 2' படம் 1000 கோடி வசூலையும் கடந்து ஆச்சரியப்படுத்தியது.
இந்த ஆண்டிலேயே மற்றுமொரு கன்னடப் படம் வசூல் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 'கேஜிஎப் 2' படத்தை பான் இந்தியா படமாக வெளியிட்டு வெளியான மொழிகளில் நிறையவே புரமோஷன் செய்தார்கள். ஆனால், 'காந்தாரா' படம் கன்னடத்தில் மட்டுமே முதன் முதலில் வெளியானது. இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். இருந்தாலும் வெளியான அனைத்து டப்பிங் மொழிகளிலும் கூட நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
உலக அளவில் தற்போது இந்தப் படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.280 கோடி வசூலையும், வெளிநாடுகளில் ரூ.20 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்று ரூ.300 கோடி சாதனையைப் புரிந்துள்ளது. இப்படத்தின் வெற்றி பிராந்திய அளவிலான கலாச்சாரங்களை வெளிப்படுத்தக் கூடிய படங்களுக்கு இப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது.
இனி, அந்தந்த மொழி, மாநில, கலாச்சாரப் படங்களை நிறைய எதிர்பார்க்கலாம்.