ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் உடனடியாக டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அப்படி வெளியிட்ட இடங்களிலெல்லாம் வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் புது சாதனைகளை படைத்து வருகிறது. இதற்கு முன்னதாக கன்னடத்தில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் கன்னட சினிமாவில் முதன்முதலாக பல சாதனைகளை படைத்தன. அது மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் பல சாதனைகளைப் படைத்த முதல் கன்னடப்படம் என்கிற பெருமையும் அதற்கு கிடைத்தது.
இந்தநிலையில் காந்தாரா திரைப்படமும் கேஜிஎப் படத்தை போல சில சாதனைகளை படைத்து வருகிறது. ஒரு சில இடங்களில் கே ஜி எப் படத்தின் சாதனைகளையும் முறியடித்து வருகிறது. அந்தவகையில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான காந்தாரா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் தெலுங்கில் பெற்ற வசூலை ஓவர்டேக் செய்திருந்தது. இந்த நிலையில் வெளியான 13 நாட்களில் தெலுங்கில் கமலின் விக்ரம் படம் வசூலித்த தொகையை தற்போது தாண்டியுள்ளது காந்தாரா. இப்போது வரை தெலுங்கில் 45 கோடி வசூல் செய்துள்ள காந்தாரா, இன்னும் சில நாட்களில் 50 கோடி இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.