நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தனுஷ் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள படம் 'வாத்தி'. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கியுள்ள படம் இது. இப்படத்தின் டீசர் மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியானது. படத்தின் டீசரைப் பற்றி மட்டும் தனது சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்திருந்தார் தனுஷ்.
அதற்குப் பிறகு 'வாத்தி' படத்தை அவர் கண்டு கொள்ளவே இல்லை. அதற்கடுத்து வெளியான 'திருச்சிற்றம்பலம், நானே வருவேன்' ஆகிய படங்களைப் பற்றியும், அவர் தற்போது நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தைப் பற்றி மட்டுமே பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு கூட 'வாத்தி' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்கள். அதையும் தனுஷ் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார், “வாத்தி' படத்தின் முதல் சிங்கிள் விரைவில்…பாடலை எழுதியது பொயட்டு தனுஷ்…ஒரு காதல் பாடல்” என முதல் சிங்கிள் வெளியீடு பற்றி நேற்று ஒரு அப்டேட் கொடுத்திருந்தார். தான் எழுதிய இந்தப் பாடல் பற்றி கூட தனுஷ் எந்த ஒரு பதிவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை.
இதனிடையே, டிசம்பர் 2ம் தேதி வெளியாவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக தகவல் பரவியது. திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று படத்தின் பிஆர்ஓ தெரிவித்துள்ளார். இருப்பினும் 'வாத்தி' படத்தை தனுஷ் தவிர்ப்பது ஏன் என அவரது ரசிகர்களும் ஆச்சரியத்துடன் உள்ளனர்.