திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
மோகன்லால் நடித்த ‛மான்ஸ்டர்' படம் கடந்த 21ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹனிரோஸ், லட்சுமி மஞ்சு சித்திக் உள்பட பலர் நடத்துள்ளனர். மோகன்லால் தற்போது அலோன், ஒலிவும் தீரவும், பரோஸ், ராம், எம்புரான், லூசிபர் 2 உள்பட பல படங்களில் நடிக்கிறார். 2024 டிசம்பர் வரை அவரது கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் மோகன்லால் அடுத்ததாக 'ஜல்லிக்கட்டு' படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் உடன் கைகோர்க்க உள்ளார். இது தொடர்பாக மோகன்லால் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளார். “எனது அடுத்த படம் இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான மற்றும் அபார திறமையான இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸுடன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தை ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ், மேக்ஸ் லேப்ஸ் மற்றும் செஞ்சுரி பிலிம்ஸ் தயாரிக்கும்'' என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லிஜோ ஜோஸ் தற்போது மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தமிழ் படத்தை இயக்கி வருகிறார்.