ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் |

மோகன்லால் நடித்த ‛மான்ஸ்டர்' படம் கடந்த 21ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹனிரோஸ், லட்சுமி மஞ்சு சித்திக் உள்பட பலர் நடத்துள்ளனர். மோகன்லால் தற்போது அலோன், ஒலிவும் தீரவும், பரோஸ், ராம், எம்புரான், லூசிபர் 2 உள்பட பல படங்களில் நடிக்கிறார். 2024 டிசம்பர் வரை அவரது கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில் மோகன்லால் அடுத்ததாக 'ஜல்லிக்கட்டு' படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் உடன் கைகோர்க்க உள்ளார். இது தொடர்பாக மோகன்லால் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளார். “எனது அடுத்த படம் இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான மற்றும் அபார திறமையான இயக்குநர்களில் ஒருவரான லிஜோ ஜோஸுடன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தை ஜான் அண்ட் மேரி கிரியேட்டிவ், மேக்ஸ் லேப்ஸ் மற்றும் செஞ்சுரி பிலிம்ஸ் தயாரிக்கும்'' என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் லிஜோ ஜோஸ் தற்போது மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தமிழ் படத்தை இயக்கி வருகிறார்.