திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் |
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள காந்தாரா படம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 20 கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் 200 கோடியை தாண்டி வசூலையும் வாரிகுவித்து வருகிறது. நடிகர் ரஜினி படத்தை பார்த்துவிட்டு இந்தியாவின் மாஸ்டர் பீஸ் என்று புகழ்ந்துள்ளார்.
இந்நிலையில், கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் ஏற்பாட்டின் பேரில் 'காந்தாரா' திரையிடப்பட்டது. இது தொடர்பாக ஈஷா வெளியிட்ட பதிவில் "கந்தாரா திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக ரிஷப் ஷெட்டி, ஹோம்பேல் நிறுவனத்திற்கு நன்றி'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தாரா ஈஷாவில் திரையிடப்படும் இரண்டாவது படம். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு கங்கனா நடித்திருந்த மணிகர்னிகா படம் திரையிடப்பட்டது. இந்த படம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய ஜான்சி ராணியின் வாழ்க்கை கதை.